Wednesday, July 27, 2005

குழந்தைகள் பாடல் - காட்டுப்பாக்கம் தாத்தா

இப்போதெல்லாம் பல வலைப் பதிவுகளில் குழந்தைகள் கதை, பாடல்கள் வண்ண விளையாட்டு என்று களை கட்டி வ்ருவதால், நானும் என் பங்குக்கு சிறு வயதில் கற்ற ஆனால் இன்னும் மறக்காத பாடல் ஒன்றை சிறியவர், பெரியவர் மற்றும் (வளர்ந்த) குழந்தைகளுக்காகப் பதிகிறேன்.

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

இப்பாடலை இயற்றியவர் கவிஞர் அழ.வள்ளியப்பா என்று நினைக்கிறேன். காப்புரிமைச் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அன்பர்கள் பின்னூட்டங்களில் சுட்டிக் காட்டுங்கள். பதிவைத் தூக்கிவிடுகிறேன்..... நன்றி.....

Comments:
Naan En Pasangalukku indha Paattu Solli koduthene..In fact, she drew (sort of drawn...she imagined the thatha like Santa and drew it) for the same and took it to the school.
 
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி அவர்களே..
 
//(வளர்ந்த) குழந்தைகளுக்காகப் பதிகிறேன்.//

நன்றி தாத்தா
 
ஐயா அபூ உமர்,

இப்படி என்னைத் தாத்தாவாக்கிப்புட்டீரே! என்னவோ நல்லா இருங்க!
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?



Free Hit Counter